Monday, 16 December 2013

என் கதை.. ரஜினிகாந்த் நெகிழ்ச்சிப் பேச்சு ..!


வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழும் என்பதற்கு என் கதைதான் உதாரணம் என்று கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

 என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனத்தின் 25வது வெள்ளி விழா ஆண்டையொட்டி நடத்தப்பட்ட ஆன்லைன் கருத்துக் கணிப்பில் இந்தியாவின் கிரேட்டஸ்ட் இந்தியராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ரஜினிகாந்த். 

ரஜினிகாந்த்தைப் போல மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் முதலிடம் ரஜினிக்குத்தான். விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடந்தது. அதில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு விருதினை வழங்கினார்

Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/my-story-proves-miracles-do-happen-rajinikanth-189559.html

Tuesday, 10 December 2013

அமர் சேவா சங்கம்....ஆய்க்குடி ராமகிருஷ்ணன் !

அமர் சேவா சங்கம்.
மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை அன்பும், சமுதாயத்தின் அரவணைப்பும், அரசாங்கத்தின் வேலை வாய்ப்பும்தான் என்கிறார் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே அமைதி குடிகொண்டுள்ள ஆய்க்குடி கிராமத்தில் அமைந்துள்ள அமர் சேவா சங்கத்தின் தலைவர்ஆய்க்குடி ராமகிருஷ்ணன்.

இவர் நான்காம் வருட பொறியாளர் படிப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது கடற்படை அதிகாரிக்கான வேலையில் ஈர்ப்பு ஏற்பட்டு அங்கு சென்றார். படிப்படியாக அனைத்து தேர்வுகளையும் முடித்தவர் கடைசியாக உடற்தகுதி தேர்வின்போது ஏற்பட்ட விபத்தில் முதுகுதண்டு வடம் பாதிக்கப்பட்டு பெங்களூரு மற்றும் புனேயில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

கழுத்திற்கு கீழ் செயல்படாத உறுப்புகளை வைத்துக்கொண்டு இனி எதற்கு இந்த வாழ்வு என்று தன் கனவுகள் நொறுங்கிப்போன நிலையில் இருந்தவரை இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அமர்ஜித் என்பவர்தான் இறைவன் படைப்பில் எல்லாவற்றுக்கும் ஒரு அர்த்தம் உண்டு உனக்கு இந்த நிலை ஏற்பட்டது கூட ஏதோ ஒரு சாதனை புரிவதற்குதான் என்று நம்பிக்கை விதைகளை மனதில் விதைத்தார்.

அந்த நம்பிக்கையுடன் தன் சொந்த ஊரான ஆய்க்குடிக்கு திரும்பினாலும் ஆரம்பத்தில் எதுவும் பிடிபடவில்லை. இவரை பராமரிக்கவும் பார்த்துக்கொள்ளவும் பலரது உதவி தேவைப்பட்டது. ஒரு நாளைக்கு ஏழுமுறை குளித்தால்தான் உடல் உஷ்ணம் குறையும் என்ற நிலையில் என் தந்தையார் ரோட்டில் போய் நின்று கொண்டு போவோர் வருவோரை எல்லாம் துணைக்கு அழைத்து வந்து என்னை குளிப்பாட்டியது உண்டு.

இந்த நிலையில் நான் எதற்கு உபயோகம் ஆவேன் என்று என்னையே கேட்ட போது நான் படித்த படிப்புதான் என் கண்முன் வந்தது. என்னை இந்த நிலையிலும் நேசித்து பாசம் காட்டிய ஆய்க்குடி கிராம குழந்தைகளுக்கு காலை மற்றும் மாலை வேளையில் பாடம் நடத்தினேன், அதையே விரிவு படுத்தி ஒரு கீற்றுக்கொட்டகையில் ஒரே ஒரு டீச்சருடன் கடந்த 1981ம் வருடம் துவங்கப்பட்டதுதான் அமர்சேவா சங்கம். எனக்குள் நம்பிக்கை விதை விதைத்த மருத்துவர் அமர் பெயரையே சேவா நிறுவனத்திற்கு வைத்தேன்.

அதன்பிறகு மாற்றுத் திறனாளி என்ற முறையில் மாற்றுத் திறனாளிகளின் தேவை என்ன என்பதை அறிந்து அதை களைவதற்காக கடுமையாக பாடுபட்டேன்.ஒரு ரப்பர் பந்து போல என்னை சுருட்டி எடுத்துக்கொண்டு ரயிலிலும், பஸ்சிலும், காரிலும் கொண்டு செல்வார்கள் நானும் சலிக்காமல் பல ஊர்களுக்ககு பயணம் மேற்கொண்டு சங்க வளர்ச்சிக்கான செயல்களில் இறங்கினேன்.

நல்ல பெற்றோர்கள், நல்ல ஊடக நண்பர்கள், நல்ல மக்கள், நல்ல நன்கொடையாளர்கள் என்று என்னைச் சுற்றி நல்ல விஷயங்களாகவே இருக்க அமர்சேவா சங்கத்தில் பல நல்ல காரியங்கள் மள, மளவென நடந்தேறியது.

இன்று 32 ஏக்கரில் அமர்சேவா சங்கம் விரிந்து பரந்துள்ளது.
உள்ளே ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு தொழில்கல்வி கற்றுத் தரப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் பொம்மைகள், நோட்டு புத்தகங்கள், யூனிபார்ம்கள் தைத்தும், தயாரித்தும் கொடுத்து சம்பாதித்து வருகின்றனர்.

சிறு குழந்தைகளுக்கு உடல் ஊனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது உடனே சரிப்படுத்தும் மையம் உள்ளது. ஆசியாவிலேயே முதுகுதண்டு வடம் சிகிச்சை செய்யும் நான்காவது மையம் இங்குதான் உள்ளது.

எனது தொண்டிற்கு தோள் கொடுக்கும் விதத்தில் என்னைப்போலவே கழுத்திற்கு கீழ் செயல்பாடு இல்லாத எஸ்.சங்கரராமன் செயலாளராக வந்தபின் சங்கத்தின் பணிகள் இன்னும் வேகம் பிடித்துள்ளது.

கள்ளி முளைத்து கிடந்த காட்டில் இன்று கல்வி முளைத்து காணப்படுகிறது என்று ஊடகங்களால் ஊட்டி வளர்க்க்கப்பட்டுவரும் அமர்சேவா சங்கம் இன்னும் போகவேண்டிய தூரமும் எட்ட வேண்டிய எல்லைகளும் நிறையவே இருக்கின்றது.
முதுகுதண்டு வட பாதிப்பு மையத்தை விரிவு படுத்த வேண்டும், சிறு வயதிலேயே குழந்தைகளின் மன.உடல் ஊனம் கண்டறியப்பட்டு அவை களையப்பட தேவையான கருவிகள் நிறைய வாங்கப்பட வேண்டும். தாய், தந்தையற்ற உடல் ஊனமுற்றவர்களின் வாழ்நாள் முழுவதற்குமான காப்பகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை அன்பும், சமுதாயத்தின் அரவணைப்பும், அரசாங்கத்தின் வேலை வாய்ப்பும்தான். வெளிநாடுகளில் ஒரு சதவீத வேலைவாய்ப்பு என்பதை கட்டாயமாக அமல்படுத்துகின்றனர் அதே போல இங்கேயும் அமல்படுத்தினால் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்குமே வேலை கிடைத்து விடும். அதற்கான முயற்சிகளில் நானும் செயலாளர் சங்கரராமனும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். உங்களைப் போன்ற நல்லோர் ஆதரவால் எங்கள் கனவுகள் அனைத்தும் மெய்ப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறி முடித்தார் ராமகிருஷ்ணன்.
நாட்டில் எத்தனையோ தொண்டு நிறுவனங்களை பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். மன, உடல் வளர்ச்சி குறைந்த ஆதரவற்ற குழந்தைகளை காண்பித்து தொண்டு நிறுவனத்தை ஆரம்பிப்பவர்கள் ஆரம்பித்து ஐந்து வருடங்களில் சம்பந்தபட்ட குழந்தைகள் வளர்ச்சியை இரண்டாது இடத்திற்கு தள்ளிவிட்டு தங்களது வளர்ச்சியில் மட்டும் அக்கறை காண்பித்து ஹைடெக்காக காணப்படுவார்கள்.

ஆனால் அமர் சேவா சங்கம் அப்படி இல்லாமல் ஆரம்பத்தில் இருந்த அதே எளிமை கோலத்துடன் காணப்படுகிறது. ஒவ்வொரு பைசாவையும் பார்த்து பார்த்து யோசித்து யோசித்து செலவு செய்கின்றனர். கிட்டத்தட்ட 32 வருடமாகியும் தலைவர் ராமகிருஷ்ணன் ஆடம்பரத்தின் அரிச்சுவடி கூட தன் மீது படரவிடாமல் எளிமை திருக்கோலத்தில் காணப்படுகிறார். என்னால் ரொம்ப நேரம் உட்கார்ந்து பேச முடியாது கொஞ்சம் படுத்துண்டு பேசலாமா? என பணிவுடன் அனுமதி கேட்கிறார். குற்றாலத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில்தான் அமர் சேவா சங்கம் இருக்கிறது அங்கே வர்ரவங்க ஒரு எட்டு இங்கேயும் வந்துட்டு போங்க எங்க குழந்தைகள் ரொம்ப சந்தோஷப்படும்.நீங்களும் இங்கே அடிக்கடி வந்துட்ட போங்க நாங்க சந்தோஷப்படுவோம் என்கிறார்.

அமர் சேவா சங்க விருந்தினர் விடுதியில் இரண்டு நாள் தங்கியிருந்து அவர்களுடன் வாழ்ந்து பார்த்த போது வாழ்க்கையின் பல அர்த்தங்களை உணர முடிந்தது. அதை அங்குள்ள குழந்தைகளே உணர்த்தினர். அவர்களிடம் கவலை இல்லை, கண்ணீர் இல்லை, பசி இல்லை, போட்டி இல்லை, பொறாமை இல்லை மாறாக நம்மால் முடியும் என்ற மலையளவு நம்பிக்கை இருக்கிறது குறையாத அன்பு இருக்கிறது குன்றாத பாசம் இருக்கிறது இந்த நாட்டிற்கும் பிறந்த வீட்டிற்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் இருக்கிறது. இத்தனைக்கும் காரணம் கடவுள் போல அவர்களுக்காக ராமகிருஷ்ணன் இருப்பதினால்.

ஞானங்கள் பல ஊனமாகி நாட்டில் இருக்கும் நிலையில் பல ஊனங்கள் இங்கே ஞானங்களாக இருக்கின்றனர் என்பதுதான்.
அமர்சேவா சங்க தலைவர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் பேசுவற்கான எண்: 9994385170.
— 
https://www.facebook.com/pages/Amar-Seva-Sangam/201245449949441


நன்றி ::  taken form  Internet  ::https://www.facebook.com/iyyasamy

Wednesday, 6 November 2013

11/12/13 அபூர்வ தினமாம்....!

திருமணம் செய்ய க்யூ.... 11/12/13 அபூர்வ தினமாம்..!
டிசம்பர் 11, 2013,  இந்த ஆண்டு நவம்பர் மாதம் ,12ம் தேதி- அதாவது மாதம், தேதி, வருடம் என்ற வரிசையில் வைத்தால் 11-12-13 என்று வரும். 

அதேபோல, டிசம்பர் மாதம் 11ம் தேதியும் (11/12/13) இந்த ஆண்டுக்கு அபூர்வ தினங்களாக கூறப்படுகிறது.

இந்த அரிய நாள் 100 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் அந்த அபூர்வ நாளாக இது கருதப்படுகிறது. இந்த நாளை அதிர்ஷ்ட நாளாக இளைஞர்களும், இளம் பெண்களும் கருதுகின்றனர். அதை தங்களின் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக விரும்புகின்றனர்.


இந்த அபூர்வ நாளில் தங்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளில் 2,265 ஜோடிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை அமெரிக்காவை சேர்ந்த தனியார் திருமண ஏற்பாட்டாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது

Friday, 1 November 2013

ஆயுர்வேதம் கை கொடுக்குமா ?



     இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் நாம் சந்திக்கும் முக்கிய பிரச்சனை உடல் பருமன். அதற்கு காரணம் நம்முடைய சுற்றுச் சூழலும், மோசமான உணவு பழக்கமும் தான்.

     உடல் எடையை குறைக்க பல வழிகள் உள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், பத்திய உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றை சொல்லலாம். ஆனால் ஆயுர்வேதமும் அதற்கு கை கொடுக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உடல் பருமன் பிரச்சனைக்கான ஆயுர்வேத சிகிச்சை, உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுவதிலிருந்து தொடங்கும். இதனை 'அமா' என்று அழைப்பார்கள். 

     முறையற்ற உணவு பழக்கம், சுற்றுப்புற மாசு, சுமையான வாழ்க்கை முறையால் ஏற்படும் தீவிரமான மன அழுத்தம் போன்றவைகளால் உடலில் நச்சுத்தன்மை குவியும். தண்ணீரில் கரையும் நச்சுப் பொருட்கள் சிறுநீர், மலம் மற்றும் வியர்வை வழியாக சுலபமாக வெளியேறிவிடும். ஆனால் மற்றவைகள் எல்லாம் சிரமப்படும். முறையான உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் இவ்வகை நச்சுப்பொருட்களை நீக்க உதவும். 

      இருப்பினும், கொழுப்பில் கரையும் நச்சுப் பொருட்கள் அவ்வளவு சுலபமாக வெளியேறி விடாது. இவ்வகை அசுத்தம் வயிறு, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளை தான் முதலில் குறி வைக்கும். இப்பகுதிகளில் இவை கொழுப்பாக தேங்கி விடும். ஆயுர்வேத நுட்பங்கள் முதலில் 'அமா' வை தான் குறி வைக்கும். அதன் படி உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும். அதிலும் கொழுப்பு அணுக்களை சுருக்கி, இதனை சிறப்பாக செயல்படுத்தும். உங்களுக்கு வயது அதிகமாக அதிகமாக கொழுப்பு வெளியேற்றம் குறையும். அதனால் இந்த நுட்பத்தை அடிக்கடி செய்து வந்தால், நச்சுப் பொருட்கள் மற்றும் அசுத்தங்களை சீரான முறையில் உடலில் இருந்து வெளியேற்றலாம். மேலும் இது வருங்காலத்தில் ஏற்படும் தீவிரமான உடல் பருமனையும் தடுக்கும்.

     உடல் பருமனை நீக்க செய்யப்படும் ஆயுர்வேத சிகிச்சைக்கு முக்கியமாக விளங்குவது ஆரோக்கியமான வாழ்வு முறை. இது பொதுவான ஒரு வாக்கியமாக இருக்கலாம், ஆனால் அது தான் உண்மை. அதற்கு முதலில் இரவு வேகமாக தூங்கி, காலையில் வேகமாக விழிக்க வேண்டும். நம் உடம்பிலும் ஒரு கடிகாரம் உள்ளது. அது பாதிக்கப்பட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும். 

    ஆரோக்கியமான வாழ்வு முறை உணவு பழக்கத்தை பொறுத்து அமையும். ஆயுர்வேதத்தை பொருத்தவரை, உடல் எடையை அதிகமாக உள்ளவர்களை பருவகால காய்கறிகளையும், பழங்களையும் உண்ண சொல்கின்றனர் வல்லுனர்கள். மேலும் இவ்வகை இயற்கை உணவு மற்றும் பழங்களில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆயுர்வேத முறைப்படி உடல் எடையை குறைக்க முற்படும் போது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

http://tamil.boldsky.com/health/diet-fitness/2013/how-does-ayurveda-help-in-weight-loss-004211.html

Thursday, 31 October 2013

ஆரம்பம்... முதல் காட்சி ..!

அஜீத்தின் தீபாவளி ஸ்பெஷலான ஆரம்பம் படத்தின் முதல் காட்சி சற்று 

நேரத்துக்கு முன் முடிந்தது !

படத்தின் முதல் பாதி செம ஜாலியாக உள்ளது !. 

இரண்டாம் பாதி மட்டும் இன்னும் நன்றாக வந்திருக்கலாம் .!!


        இடம்பெற்றுள்ள ப்ளாஷ்பேக்குகள் மொக்கையாக உள்ளன. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அப்படி ஒன்றும் பெரிய மொக்கையல்ல என திருப்திப்பட்டுக் கொள்ளலாம் !




Wednesday, 30 October 2013

கட்டாயமாக செய்யக்கூடாதவை..!

உணவு சாப்பிட்டபின் கட்டாயமாக செய்யக்கூடாதவை:

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாத ஒன்று.

1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால்,அது சாதாரண நேரங்களில் சிகரெட்  பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.
2. சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால்,எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ          அவ்வளவு பெரிய தீமையாகும்.
3. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது.காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு ப்புசத்திற்கு ஆளாக்கும்நிலையை(Bloated with air) உருவாக்குகிறது.எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம்சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும்பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில்    உள்ளபுரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக்கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம்  உண்டு.

5. சாப்பிட்டபிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்தி விடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில்
அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

6. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக்கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் ளிக்கும்போது  உடல்மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.வயிற்றுக்குச் செரிமானத்திற்குச்  செல்ல வேண்டிய ரத்தஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான  உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச்செய்யக்கூடும்.

7. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் ஏன் சிலர்விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு.சர்க்கரை நோய்(டயாபடிக்)உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க
அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்லகேட்டிருப்பீர்கள்.சாப்பிட்ட பின் நடந்தால் செரிமானஉறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து,உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்தஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும்.எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால்அதனை உடனே கைவிடுவது நல்லது.

8. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர்உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது.உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச்செல்ல வேண்டும். மருத்துவத் துறையில் நவீன மூடநம்பிக்கைகள் பலவும் இதுபோல உண்டு.



Monday, 28 October 2013

ஒரு சமுகத்தை முன்னேற்ற முதலில் கல்வியை கொடு ! !



 முதல் முறையாக பட்டப்படிப்பு படிக்கும் நரிக்குறவர் இன மாணவி..!!! 

 தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா எச்.தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்கி (வயது 18) என்ற நரிக்குறவர் இன மாணவி தர்மபுரி மாவட்டத்திலேயே முதல் முறையாக பிளஸ்-2 வகுப்பில் தேர்சசி பெற்று பட்டப்படிப்பை எட்டிப் பிடித்துள்ளார்...!!! 

ஷேர் பண்ணுங்க நண்பர்களே... பலரையும் சென்றடையட்டும்....!!!!

ஒரு சமுகத்தை ஒடுக்க வேண்டும் எனில் ,அவர்களுக்கு கல்வியை மறு !

ஒரு சமுகத்தை  முன்னேற்ற முதலில் கல்வியை கொடு ! !

Thursday, 24 October 2013

84 நோபல் பரிசுகள்.....!



84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா? 

எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ?? 

அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!

1.கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம் 

2.கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான் உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது

3. உலகத்தில் முதன் முதாலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான் 

4.கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம் .. 


 உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர் 

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு 

இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை........

இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று 

அந்த நாடு தான் இஸ்ரேல்

நல்ல மனசுகாரன் ..விஜய் சேதுபதி !



விஜய் சேதுபதி – அவர் வீட்டுக்கு படையெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு அவர் 

சொல்வது 2017 வரைக்கும் கால்ஷீட் இல்லை என்பது. அதோடு நிற்காமல் 

அவர் அடுத்து சொல்லும் விஷயம் “திடீர்னு படங்கள் ஹிட் ஆனதும் என்னை 

தேடி வர்றீங்க. என்னை மாதிரியே நிறைய பேரு இதே கோடம்பாக்கத்தில் 

சுத்துறாங்க. அவங்களில் யார் உங்க கதைக்கு பொருத்தமா இருப்பாங்கன்னு 

கண்டு பிடிங்க. அவங்களுக்கும் வாழ்வு கொடுத்த மாதிரி இருக்கும். 

இல்லேன்னா சொல்லுங்க, நானே அப்படிப்பட்ட நண்பர்களை சொல்றேன் 

என்கிறாராம். ”பக்கத்து பிளேட்ல பல்லி விழுந்தா நமக்கென்ன, சொந்த 

பிளேட்ல சோறு விழுந்தா போதும்னு நினைக்கிற உலகத்துல இப்படி 

இருக்கிறவரை பாராட்டத் தான் வேண்டும் ...!

Wednesday, 23 October 2013

ஆண்களுக்கு 10 நிமிடத்திலேயே டயர்டாய்டும்.. அது என்ன?


ராம்ஜி - ஆண்களும் பெண்களும் இணைந்து செய்யும் வேலை அது. ஆனால், ஆண்களுக்கு பத்து நிமிடத்திலேயே சோர்வாகிப் போய் விடும். ஆனால் பெண்களுக்கு டைம் ஆக ஆகத்தான் உற்சாகம் கூடும்.. அது என்ன....?


 ராகவி - சீ .. போ.. இது கூடவா தெரியாது....! ராம்ஜி- மண்டு, மண்டு.. அது ஷாப்பிங்.. தப்புத் தப்பாவே நினைக்காதே....!

Friday, 18 October 2013

ரியல் எஸ்டேட்... விலை வீழ்ச்சி அபாயம் ! ஓர் அதிரடி ரிப்போர்ட்

இது விகடனில் வந்த ஒரு மிக நல்ல கட்டுரை.


நன்றி விகடன் மற்றும் கட்டுரை ஆசிரியர் சரவணன் அவர்களுக்கு.
மூலம்ரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி அபாயம்


###

சமீப காலம் வரை ஓஹோவென வளர்ச்சி கண்ட ரியல் எஸ்டேட் துறை, இப்போது தலைகீழாக மாறி இருக்கிறது. மனை மற்றும் வீடுகளின் விலை நடுத்தர மக்களால் வாங்க முடியாத அளவுக்கு எகிறிவிட்டதால், பலரும் சொத்து வாங்கும் முடிவை தள்ளிவைத்துவிட்டு, வாடகை வீடே நிரந்தரம் என்கிற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால் இந்தியா முழுக்கவே வீடு மற்றும் மனைகளின் விலை சரியும் அபாயம் உருவாகியுள்ளது.  



அண்மையில் அசோசம் அமைப்பு நடத்திய சர்வேயில் 82 சதவிகிதம் இந்திய இளைஞர்கள் தங்களது  விருப்பமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டில் ஒன்றாக ரியல் எஸ்டேட்டை குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மனையின் விலையைத் தனிநபர் சராசரி வருமானத்தோடு ஒப்பிடும்போது உலகத்திலேயே அதிகமாக உள்ளது. இதனால் புதிய முதலீட்டுக்கான வாய்ப்பு குறைந்து, விலை இறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சிக்கு சொல்லப்படும் காரணங்கள் பல. அவற்றில் முக்கியமானவை இனி:
உச்சத்தில் பணவீக்கம்!
பணவீக்கம் உச்சத்தில் இருப்பதைக் காரணம் காட்டி ரிசர்வ் வங்கி, கடனுக்கான வட்டியைக் குறைக்காமல் வைத்திருக்கிறது. இதனால் வீட்டுக் கடனுக்கான வட்டியும் தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் சுமார் 8.5 சதவிகிதத்தில் ஃப்ளோட்டிங் ரேட்டில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கான வட்டி இப்போது 11-12% என்கிற அளவுக்கு அதிகரித்துவிட்டது. இதனால் வீட்டுக் கடன் வாங்கிய பலரும் மாதத் தவணைக் கட்டுவதில் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். பொருளாதார மந்தநிலையால் எதிர்பார்த்த அளவுக்கு சம்பளம் அதிகரிக்கவில்லை. அதேசமயம், சேமிப்பு அதிகமாக குறைந்துள்ளதும் வீட்டுக் கடன் வாங்கியவர்களைச் சற்று அதிகமாகவே பாதித்திருக்கிறது.
அரசு வழிகாட்டி மதிப்பு அதிர்ச்சி!
நாடு முழுக்க சந்தை மதிப்புக்கு இணையாக அரசு வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. டெல்லி போன்ற மாநிலங்களில் பவர் ஆஃப் அட்டர்னி மூலமே சொத்து கைமாறியது, வங்கிகள் வீட்டுக் கடன் வழங்கியது எல்லாம் நிறுத்தப்பட்டு சொத்தை பதிவு செய்தால்தான் விற்க முடியும், வீட்டுக் கடன் வாங்க முடியும் என்கிற நிலை வந்து விட்டது. தமிழ்நாட்டிலும், பெரும்பாலான இடங்களில் சந்தை மதிப்புக்கு இணையாக அரசு வழிகாட்டி மதிப்பு உயர்ந்துவிட்டது. இதனால் பத்திரப்பதிவு செலவு கணிசமாக உயரவே, மக்களும் புதிதாக இடம் வாங்க யோசிக்கிறார்கள்.  
சிக்கலில் பொருளாதாரம்!
உலக அளவிலும் வளர்ந்து வரும் நாடுகளி லும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் ரூபாயின் மதிப்பும் பொருளாதார வளர்ச்சியும் சிக்கலில் இருக்கிறது. தொழிற்துறையில் புதிய முதலீடுகள் குறைந்து வளர்ச்சி மந்தமாக இருப்பதால்  இது ரியல் எஸ்டேட் துறையில் பெரிய அளவில் பாதிப்பை உருவாக்கி இருக்கிறது.
எக்கச்சக்க விலை!
தனிநபர் ஆண்டு வருமானத்தோடு ஒப்பிடும்போது உலக அளவில் இந்திய ரியல் எஸ்டேட்தான் மிகவும் விலை அதிகமாக இருக்கிறது. பல பகுதிகளில் மனை விலை பல நூறு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.  இந்த அளவு அதிக விலை தந்து மனையை வாங்கும் நிலையில் இப்போது பலரும் இல்லை.

வாங்கும் திறன் இல்லை!
இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1.20 கோடி பேர் புதிதாக வேலை தேடி வருகின்றனர். ஆனால், 45 லட்சம் பேருக்குதான் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரமுடிகிறது. இதனால் பலரும் புதிதாக மனை வாங்குகிற திறன் இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் இனிவரும் காலத்தில் சொந்த வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையும். ரியல் எஸ்டேட் முதலீடும் குறையும். இதனால் விலை வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெருநகரங்களில் வீடு அல்லது ஃப்ளாட் வாங்கவேண்டும் என்றால் இன்றைய நிலையில் சுமார் 60 - 75 லட்சம் ரூபாய் தேவைப்படும். இந்த அளவுக்கு அதிக வசதி உள்ளவர்கள் இந்தியாவில் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். அதனால் விற்பனையில் நிச்சயம் தொய்வு ஏற்படவே அதிக வாய்ப்பு என்கிறார்கள்.
தவிர, சொந்த வீடு வாங்கவேண்டும் எனில் இன்றைய நிலையில் சராசரியாக ஒருவரது இருபதாண்டு கால சேமிப்பு தேவைப்படுகிறது. அந்த வகையில் வெகு சிலரால் மட்டுமே சொந்த வீடு வாங்க முடிகிறது.
குறைந்துபோன பிரைவேட் ஈக்விட்டி!
இந்திய ரியல் எஸ்டேட்டில் 2005 - 2012 ஆண்டுகளில் வெளிநாட்டைச் சேர்ந்த பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்தன. 20 பில்லியன் டாலர் இத்துறையில் அயல்நாடுகளிலிருந்து முதலீடு செய்யப்பட்டது. இந்த முதலீடுகள் அதிகமாக மனைகள் வாங்க உபயோகப் படுத்தப்பட்டன. பல நிறுவனங்கள் வீடுகளை இன்னும் கட்டவே  ஆரம்பிக்கவில்லை. பிரைவேட் ஈக்விட்டி  முதலீடு என்பது 7 முதல் 8 வருடங்களுக்கு என்பதால் தற்போது அவை முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுக்கும் காலம் வந்துவிட்டது. இந்த நிறுவனங்கள் சராசரியாக டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 45-ஆக இருக்கும்போது முதலீடு செய்திருக்கின்றன. இப்போது சுமார் 60 ரூபாய் என்கிற அளவில் இழப்பு என்பது 30 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது, இந்த பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களுக்கு இந்திய நிறுவனங்கள் பணத்தைத் திருப்பித் தரும்போது வட்டி இழப்பு ஒரு பக்கம் என்றால், இந்த ரூபாய் மதிப்பு மாற்றம் மூலமான இழப்பு இன்னொரு பக்கம். இதனால் வீடுகள் விற்காத நிலையில் இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், வீட்டின் விலையைக் கணிசமாக குறைக்கும் நிலைக்கு தள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த 12-18 மாத காலத்தில் விலை இன்னும் குறையக்கூடும் என்கிறார்கள்.  
விரைவில் தேர்தல்!
அடுத்த 10 மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாநிலத் தேர்தல்கள் இந்தியாவில் நடக்க இருக்கிறது. இதற்காக சுமார் 1,500 கோடி டாலர் (சுமார் 90,000 கோடி ரூபாய்) செலவிடப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தத் தொகையில் பெரும்பகுதி அரசியல்வாதிகளின் ரியல் எஸ்டேட் முதலீட்டிலிருந்துதான் வரவேண்டி இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. அந்த வகையில் டிமாண்ட் குறைவாக இருக்கும்போது ரியல் எஸ்டேட் சொத்துகளை விலை குறைத்துதான் விற்கவேண்டி வரும் என்று சொல்கிறார்கள் அனலிஸ்ட்கள்.    
நெருக்கும் வங்கிக் கடன்!
ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயைப் பல்வேறு வங்கிகளும் புராஜெக்ட் லோன் என்கிற பெயரில் வழங்கி உள்ளன. வீடுகள் விற்காத நிலையில் அல்லது விலை குறைத்து விற்கும்போது வங்கிக் கடன் திரும்ப வருவதில் சிக்கல் ஏற்படும். ஏற்கெனவே இதுபோன்ற சிக்கலில் சில முன்னணி புரமோட்டர்கள் சிக்கி இருக்கிறார்கள். இதைப் புரிந்துகொண்டு வங்கிகளும் கடனைத் திரும்பத் தரும்படி நெருக்க, இதனாலும் இடங்களின் விலை குறையும் வாய்ப்புண்டு.
பயனில்லாத வாடகை வருமானம்!
இந்தியாவில் வீட்டு வாடகை மீதான வருமானம், சொத்து விலையுடன் ஒப்பிடும் போது வெறும் 2.5 சதவிகிதமாகவே உள்ளது. 10 சதவிகித வட்டியில் வீட்டுக் கடன் வாங்கி, அதன்மூலம் வாங்கப்படும் வீட்டின் மூலம் வெறும் 2.5 சதவிகித வருமானம் கிடைத்தால் என்ன செய்வது? என பலரும் யோசிக்க ஆரம்பித்திருப்பதாலும், புதிதாக வீடு வாங்கும் முடிவைத் தள்ளிவைத்திருக்கின்றனர்.
அச்சுறுத்தும் குமிழ்!
ரியல் எஸ்டேட்டை பொறுத்தவரையில் பப்பிள் (Bubble) என்பது எதிர்காலத்தில் அதிகமாக விலை உயரும் என்கிற எதிர்பார்ப்பில் இப்போதே விலை அதிகரித்து காணப்படுவதாகும். இந்த நிலைதான் தற்போது இந்திய ரியல் எஸ்டேட்டில் உருவாகி இருப்பதாக அனலிஸ்ட்கள் சொல்கிறார்கள். அந்தவகையில், ரியல் எஸ்டேட்டில் வரும் 12-18 மாதங்களில் விலை வீழ்ச்சி 30-40 சதவிகிதம் வரை இருக்கக்கூடும் என்பது அவர்களின் கணிப்பாக இருக்கிறது. இந்த நிலை நான்கைந்து ஆண்டுகளுக்கு நீடிக்கவே வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
வழக்கில் முடியும் முதலீடு!
புதிதாக ரியல் எஸ்டேட் அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டங்கள் அறிவிக்கும்போது, அறிமுக சலுகை தருவார்கள். அதில் குறுகிய கால முதலீட்டாளர்கள் முன்பணம் சில லட்சம் ரூபாயைத் தந்து முடக்கி வைப்பார்கள்.
6 முதல் 8 மாதங்களில் விலை ஏறும்போது வேறு ஒருவருக்கு அந்த ஃப்ளாட்டை கைமாற்றிவிட்டு சுமார் 20 சதவிகித லாபம் பார்ப்பார்கள். இப்போது நிலைமை சரியில்லை என்பதால் இதுபோன்ற குறுகிய கால முதலீட்டாளர்களின் நிலைமை தர்மசங்கடமாக உள்ளது. இவர்கள் பில்டர்களிடம் பணத்தைப் புரட்ட இன்னும் சில காலம் கொடுங்கள் எனக் கேட்டு வருவதாகத் தகவல். சில வழக்குகள் நீதிமன்றம் வரைக்கும்கூட சென்றிருக்கிறது.    
ஆர்.பி.ஐ.-ன் அதிரடி!
சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடுகட்டி முடிக்கும் வரை உள்ள இ.எம்.ஐ. தொகையைத் தாங்களே ஏற்றுக்கொள்வதாக கூறி வீடுகளை விற்று வருகின்றன. வங்கிகள் வீட்டுக் கடன் தரும்போது, ரியல் எஸ்டேட் நிறுவனம் வங்கிகளிடமிருந்து முழுக் கடனையும் பெற்றுக்கொண்டு இதுபோல் சலுகைகளை அளிக்கின்றன. இதுபோல முழுத் தொகையையும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு மொத்தமாக தரக்கூடாது என ஆர்.பி.ஐ. அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, வீட்டை வாங்குபவர் சொத்து மதிப்பில் 20 சதவிகிதத்தைக் கையிலிருந்துதான் போட வேண்டும். மீதி 80 சதவிகித தொகையை வங்கிக் கடனாக அளிக்கும். இந்த 80 சதவிகித தொகையை மொத்தமாகத் தராமல் கட்டுமான நிலைக்கு ஏற்ப வங்கிகள் வழங்க வேண்டும் என ஆர்.பி.ஐ. கூறியுள்ளது. இதன்மூலம் வீடு வாங்குபவர்களுக்கு கணிசமாக வட்டி மிச்சமாகும். கடன் தரும் வங்கிகளும் சிக்கலில் மாட்டிக்கொள்வது குறையும் என்பது ஆர்.பி.ஐ-ன் எண்ணம்.
விற்காமல் கிடக்கும் வீடுகள்!
நாடு முழுக்க கட்டிமுடிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிக எண்ணிக்கையில் முடங்கிக்கிடக்கின்றன. மும்பையில் கட்டிமுடிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு ஒன்று விற்பதற்கு குறைந்தது 48 மாதங்கள் ஆகிறது. இது பெங்களூருவில் 25 மாதங்களாகவும், டெல்லியில் 23 மாதங்களாகவும், சென்னையில் இது 17 மாதங்களாகவும் இருக்கிறது. கட்டி முடிக்கப்பட்ட வீடு விற்க 15 மாதங்கள் எடுத்துக்கொள்வது வழக்கமாக இருக்கிறது. அந்தவகையில் சென்னை பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், கட்டிமுடிக்கப்பட்டு விற்காமல் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கை சென்னையில் மட்டும் 45,000 ஆக இருக்கிறது என்கிறது ரியல் எஸ்டேட் அமைப்பான கிரடாய்.  கோவையில் 4,500 குடியிருப்பு கள் விற்கப்படாமல் இருப்பதாகவும் தெரிகிறது.
ரியல் எஸ்டேட் தொடர்பான பெரும்பாலான தகவல்கள் நெகடிட்டிவ்-ஆக இருப்பதால் கூடிய விரைவில் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சொத்து வாங்க நினைப்பவர்கள் சற்று நிதானமாக யோசித்து வாங்குவதே லாபகரமாக இருக்கும்

Wednesday, 16 October 2013

விடுமுறையில் விவசாயம் ..!

விடுமுறையில் விவசாயம் செய்யுங்கள் உடல் ஆரோக்கியம் அடையும்!

எதில் மாற்று கருத்து இருந்தாலும், உலகிற்கே உணவளிப்பது விவசாயம் மட்டுமே என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது அப்படி மாற்றுக்கருத்து இல்லை என்று பகிரங்கமாக கூறிக்கொண்டு விவசாயத்தில் தற்போது கல்லூரி மாணவர்கள், படித்த இளைஞர்கள், மென்பொருள் துறையினர், சமுக சேவகர்கள் என பல்வேறு தரப்பினர் வார இறுதியில் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர் என்ற செய்தி நாளிதழ்களில் வந்தவண்ணம் உள்ளது.

சென்னை, கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் வாழும் படித்த இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு வர இறுதியில் விவசாயத்தில் ஈடுபடுகின்றார்கள் என்றும் இதில் மிகுந்த ஈடும்பாடு கொண்டவர்கள் முழுநேர விவசாயிகளாக உருவேடுகின்றனர் என்கிறது நாளிதழ் செய்திகள்.

இதேபோல் தொழில் துறையில் இருந்து தன் ஆர்வமிகுதியால் விவசாயத்தை முழுநேர தொழிலாக மாற்றிகொண்ட திரு. சதீஷ் அவர்கள் கூறுகையில் நான் ஆரம்ப காலத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரபல மென்பொருள் துறையில் பணியற்றிவரும்போது நிறைய சமுக பணிகளில் ஈடுபட்டுவந்தேன் அப்போதுதான் இயற்கை விவசாய முறையை பற்றி அறிந்தேன், எல்லோருக்கும் உணவளிக்கும் விவசாயமே!.. சிறந்த சமுகபணி என்று உணர்தேன், இதனால் இன்று முழுவநேர விவசாயியாக மாறிவிட்டேன் என்கிறார். இதே போல் திரு.ராம், திரு.ஜகன் போன்றோர் முழுநேர விவசாயிகளாக மாறிவிட்டனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

விவசாய ஆர்வளர் திரு.ராம் கூறுகையில் பெருநகரத்தில் வாழும் மக்கள் வாரவிடுமுறையில் நகரத்திற்கு அருகமையில் இருக்கும் விளைநிலங்களில் விவசாயிகளுடன் இணைந்து வேலைசெய்யலாம் இதனால் உடல் அதிக வியர்வை வெளியேற்றி அரோக்கியம் அடையச்செய்யும், ஒரு நாள் இயற்கை காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு கிடைக்கும், உலகிற்கே உணவளிக்கும் பணியை செய்த திருப்தி கிடைக்கும் கடவுளின் பிரதிநிதி விவசாயி என்ற பெருமையோடு அவர்கள் வாடிக்கையான தொழிலை செய்யலாம் என்கிறார்.
நன்றி :: இனையம்


Monday, 14 October 2013

ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும், நகரத்தில் கிடைக்காது ...!

இந்த ஆனந்தம்,ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும்,  நகரத்தில் கிடைக்காது !




Thursday, 10 October 2013

சச்சின் டெண்டுல்கரை தெரியும், "சந்தீப் உண்ணிக் கிருஷ்ணனை" தெரியுமா ?


எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள்  " சந்தீப் உண்ணிக் கிருஷ்ணன்".

சச்சின் டெண்டுல்கரை நமக்கு தெரியும், "சந்தீப் உண்ணிக் கிருஷ்ணனை" எத்தனை பேருக்கு தெரியும் ?

சந்தீப் பூனேயில் உள்ள 'நேஷனல் டிஃபன்ஸ் அகாடமியில்' பயிற்சி பெற்றார்.   அதன் பின்னர் பீஹார் ரெஜிமென்டில் பணியாற்றிய சந்தீப், இந்திய இராணுவத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் எல்லை பாதுகாப்பில் திறம்பட பணியாற்றினார்.  பின்னர். "நேஷனல் செக்யூரிட்டி கார்ட்ஸ்" எனப்படும் சிறப்பு பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, பயிற்சி முடிந்தபின், "ஸ்பெஷல் ஆக்ஷன் க்ரூப்" எனப்படும் சிறப்பு அதிரடி படையின் பல கடுமையான, துணிச்சலான, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டார்.  கார்கில் போரிலும், பல மோதல்களில்,  தன்னை நாட்டுக்காக ஈடுபடுத்திக் கொண்ட பெருமையை உடையவர்  மேஜர் சந்தீப் உண்ணிக்கிருஷ்ணன்.

பம்பாய் தாஜ் ஓட்டலுக்கு, அழிவு நாடான பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள், அப்பாவி மக்களை பினைக் கைதிக‌ளாக வைத்துக் கொண்டு, தங்கள் வெறியாட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, அதிலிருந்து அந்த பினைக் கைதிகளையும், இந்த தேசத்தின் மானத்தையும் காப்பாற்றுவதற்காக அனுப்பப்பட்டவர்கள், "ஸ்பெஷல் ஆக்ஷன் க்ரூப்" எனப்படும் "சிறப்பு அதிரடை படையினர்.  அந்த சிறப்பு அதிரடிப் படையினர்,  மக்களை மீட்பதற்காகவும்,  தீவிரவாதிகளை அழிப்பதற்காகவும் "ஆப்பரேஷன் ப்ளாக் டோர்னேடோ" என்று அழைக்கப்பட்ட ஒரு செயல்திட்டத்தை நடத்தினர்.  அந்த அதிரடைப் படைக்கு தலைமை தாங்கியவர்தான் 31 வயதே ஆன, சந்தீப் உண்ணிக் கிருஷ்ணன்.

26, நவம்பர் 2008 நள்ளிரவில், தாஜ் மஹால் ஹோட்டலை தீவிரவாதிகள் ஊடுறுவி, பல அப்பாவி மக்களை கேடயமாக வைத்துக் கொண்டும் நாசச் செயல் புரிந்துக் கொண்டு இருக்கையில், ஸ்பெஷல் ஆக்ஷன் க்ரூப் வரவழைக்கப்பட்டது.
பயங்கரமான் வெடிகுண்டுகள் மற்றும் கையெறி குண்டுக‌ளோடும்,  நவீன ரக துப்பாக்களோடும் கொலை வெறி தாண்டவம் புரிந்துக் கொண்டிருந்தனர் தீவிரவாதிகள்.  மேஜர் சந்தீப்பும் அவரின் குழுவினரும் ஆறாவது மாடியை படிகட்டுகள் வழியாக நெருங்கிவிட்டிருந்த வேளையில்,  கீழே மூன்றாவது தளத்தில் தீவிரவாதிகள் இருப்பது அவர்களுக்கு தெரிய வந்தது. தீவிரவாதிகள் சில பெண்களை பினைக்கைதிகளாக ஒரு அறையில் உள் வைத்து உட்புறமாக பூட்டிக் கொண்டிருந்தனர்.   அதை அவர்கள் நெருங்கிய வேளையில், தீவிரவாதிகளின் திடீர் தொடர் துப்பாக்கி வெடியில் கமேண்டோ "சுனில் யாதவ்" காயமுற்றார்.  மேஜர் சந்தீப் உன்னிக்கிருஷ்ணன் தன் கூட்டத்தை பின் செல்லுமாறு பணித்து, தான் முன் சென்று தீவிரமான தாக்குதலில் ஈடுபட்டார்.  இப்படி அவர் செய்ததன் மூலமாக காலில் காயமுற்ற சுனில் யாதவை காப்பாற்றி மீட்க முடிந்தது.  அவரின் ஆக்ரோஷமான தாக்குதலை சமாளிக்க முடியாமல் தீவிரவாதிகள் மற்றொரு தளத்திற்கு தப்பித்து ஓடினர்.

தன்னந்தனியாக அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியவாறு சென்ற மேஜர் சந்தீப், பின் பக்கத்திலிருந்து வந்த தாக்குதலால், படுகாயமடைந்தார்.  அவரின் உயிர் பாரத‌ மண்ணுக்காக வீழ்ந்தது. அவரின் உடல் விதைக்கப்பட்டது.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளில், பொறுக்கி எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டது பத்து தீவிரவாதிகள்.  அவர்க‌ளில் நால்வர் தாஜ்  ஹோட்டலில் அழிக்கப்பட்டனர்.  300 மக்கள் மீட்கப்பட்டனர்.  மீட்கப்பட்டவர்களில் பல வெளிநாட்டு தலைவர்களும் அடங்குவார்கள்.  

கடைசியாக மேஜர் சந்தீப் உண்ணிக்கிருஷ்ணன் சொன்ன வார்த்தைகள் "நீங்கள் யாரும் வராதீர்கள், நான் அவர்களை பார்த்துக் கொள்கிறேன்" (Don’t come up, I will handle them) என்பதுதான். இந்த தாக்குதலில் அவரோடு கஜேந்திர சிங் என்ற மற்றொரு இந்திய வீரரும் உயிரை நாட்டுக்கு அர்பித்தார்.  

நாம் பாதுகாப்பாக இருப்பதற்காக, தங்கள் இளமையை, வாழ்வை, உயிரை அர்ப்பனித்த இத்தகைய மாவீரர்களை இந்திய குடிமகன்களாகிய நாம் எப்போதும் நெஞ்சில் நிறுத்த‌ வேண்டும்.  இவர்களின் தியாகத்தை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  நமக்காக, நம் பாதுகாப்புக்காக, எங்கோ எல்லையில் மடிகிறானே முகம் தெரியாத‌ ஒரு இராணுவ வீரன் அவனை என்று இந்த தேசம் உரிய முறையில் எண்ணிப் பார்க்கிறதோ, அன்று இந்த தேசம் உயரும்.  

ஜெய் ஹிந்த்.


எனக்கு பிடித்த நிஜ மனிதர் " சந்தீப் உண்ணிக் கிருஷ்ணன்".

சச்சின் டெண்டுல்கரை நமக்கு தெரியும், "சந்தீப் உண்ணிக் கிருஷ்ணனை" எத்தனை பேருக்கு தெரியும் ?

சந்தீப் பூனேயில் உள்ள 'நேஷனல் டிஃபன்ஸ் அகாடமியில்' பயிற்சி பெற்றார். அதன் பின்னர் பீஹார் ரெஜிமென்டில் பணியாற்றிய சந்தீப், இந்திய இராணுவத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் எல்லை பாதுகாப்பில் திறம்பட பணியாற்றினார். பின்னர். "நேஷனல் செக்யூரிட்டி கார்ட்ஸ்" எனப்படும் சிறப்பு பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, பயிற்சி முடிந்தபின், "ஸ்பெஷல் ஆக்ஷன் க்ரூப்" எனப்படும் சிறப்பு அதிரடி படையின் பல கடுமையான, துணிச்சலான, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டார். கார்கில் போரிலும், பல மோதல்களில், தன்னை நாட்டுக்காக ஈடுபடுத்திக் கொண்ட பெருமையை உடையவர் மேஜர் சந்தீப் உண்ணிக்கிருஷ்ணன்.

பம்பாய் தாஜ் ஓட்டலுக்கு, அழிவு நாடான பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள், அப்பாவி மக்களை பினைக் கைதிக‌ளாக வைத்துக் கொண்டு, தங்கள் வெறியாட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, அதிலிருந்து அந்த பினைக் கைதிகளையும், இந்த தேசத்தின் மானத்தையும் காப்பாற்றுவதற்காக அனுப்பப்பட்டவர்கள், "ஸ்பெஷல் ஆக்ஷன் க்ரூப்" எனப்படும் "சிறப்பு அதிரடை படையினர். அந்த சிறப்பு அதிரடிப் படையினர், மக்களை மீட்பதற்காகவும், தீவிரவாதிகளை அழிப்பதற்காகவும் "ஆப்பரேஷன் ப்ளாக் டோர்னேடோ" என்று அழைக்கப்பட்ட ஒரு செயல்திட்டத்தை நடத்தினர். அந்த அதிரடைப் படைக்கு தலைமை தாங்கியவர்தான் 31 வயதே ஆன, சந்தீப் உண்ணிக் கிருஷ்ணன்.

26, நவம்பர் 2008 நள்ளிரவில், தாஜ் மஹால் ஹோட்டலை தீவிரவாதிகள் ஊடுறுவி, பல அப்பாவி மக்களை கேடயமாக வைத்துக் கொண்டும் நாசச் செயல் புரிந்துக் கொண்டு இருக்கையில், ஸ்பெஷல் ஆக்ஷன் க்ரூப் வரவழைக்கப்பட்டது.

பயங்கரமான் வெடிகுண்டுகள் மற்றும் கையெறி குண்டுக‌ளோடும், நவீன ரக துப்பாக்களோடும் கொலை வெறி தாண்டவம் புரிந்துக் கொண்டிருந்தனர் தீவிரவாதிகள். மேஜர் சந்தீப்பும் அவரின் குழுவினரும் ஆறாவது மாடியை படிகட்டுகள் வழியாக நெருங்கிவிட்டிருந்த வேளையில், கீழே மூன்றாவது தளத்தில் தீவிரவாதிகள் இருப்பது அவர்களுக்கு தெரிய வந்தது. தீவிரவாதிகள் சில பெண்களை பினைக்கைதிகளாக ஒரு அறையில் உள் வைத்து உட்புறமாக பூட்டிக் கொண்டிருந்தனர். அதை அவர்கள் நெருங்கிய வேளையில், தீவிரவாதிகளின் திடீர் தொடர் துப்பாக்கி வெடியில் கமேண்டோ "சுனில் யாதவ்" காயமுற்றார். மேஜர் சந்தீப் உன்னிக்கிருஷ்ணன் தன் கூட்டத்தை பின் செல்லுமாறு பணித்து, தான் முன் சென்று தீவிரமான தாக்குதலில் ஈடுபட்டார். இப்படி அவர் செய்ததன் மூலமாக காலில் காயமுற்ற சுனில் யாதவை காப்பாற்றி மீட்க முடிந்தது. அவரின் ஆக்ரோஷமான தாக்குதலை சமாளிக்க முடியாமல் தீவிரவாதிகள் மற்றொரு தளத்திற்கு தப்பித்து ஓடினர்.

தன்னந்தனியாக அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியவாறு சென்ற மேஜர் சந்தீப், பின் பக்கத்திலிருந்து வந்த தாக்குதலால், படுகாயமடைந்தார். அவரின் உயிர் பாரத‌ மண்ணுக்காக வீழ்ந்தது. அவரின் உடல் விதைக்கப்பட்டது.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளில், பொறுக்கி எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டது பத்து தீவிரவாதிகள். அவர்க‌ளில் நால்வர் தாஜ் ஹோட்டலில் அழிக்கப்பட்டனர். 300 மக்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் பல வெளிநாட்டு தலைவர்களும் அடங்குவார்கள்.

கடைசியாக மேஜர் சந்தீப் உண்ணிக்கிருஷ்ணன் சொன்ன வார்த்தைகள் "நீங்கள் யாரும் வராதீர்கள், நான் அவர்களை பார்த்துக் கொள்கிறேன்" (Don’t come up, I will handle them) என்பதுதான். இந்த தாக்குதலில் அவரோடு கஜேந்திர சிங் என்ற மற்றொரு இந்திய வீரரும் உயிரை நாட்டுக்கு அர்பித்தார்.

நாம் பாதுகாப்பாக இருப்பதற்காக, தங்கள் இளமையை, வாழ்வை, உயிரை அர்ப்பனித்த இத்தகைய மாவீரர்களை இந்திய குடிமகன்களாகிய நாம் எப்போதும் நெஞ்சில் நிறுத்த‌ வேண்டும். இவர்களின் தியாகத்தை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நமக்காக, நம் பாதுகாப்புக்காக, எங்கோ எல்லையில் மடிகிறானே முகம் தெரியாத‌ ஒரு இராணுவ வீரன் அவனை என்று இந்த தேசம் உரிய முறையில் எண்ணிப் பார்க்கிறதோ, அன்று இந்த தேசம் உயரும்.

ஜெய் ஹிந்த்.

நன்றி :: இனையம்

Monday, 30 September 2013

காதல் என்பது என்ன.... ?

காதல் என்பது......

.........................

.......................


Thursday, 26 September 2013

6 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம்...!

சினிமா விகடன் 6 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் :


சினிமா விகடன் 6 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் :

அந்தச் சிறுவன், பெற்றோரைப் பரிதவிக்கவிட்டு காணாமல் போன தன் பிறந்த நாளில் ஊதி அணைத்தது, '6 மெழுகு வத்திகள்!’

தன் மகனின் ஆறாவது பிறந்த நாளன்று அவனை மெரினா பீச்சில் தொலைத்து விடுகிறார் ஷாம். காவல் நிலையத்தில் புகார் கொடுத்துக் காத்திருக்கிறார். அவர் மகனைக் கண்டுபிடித்துக் கொடுக்கவேண்டிய போலீஸோ, மெள்ள ஓர் இருட்டு உலகத்துக்கு அவரை அறிமுகப் படுத்திவிட்டு தன் பொறுப்பைக் கை கழுவுகிறது. சென்னையில் தொடங்கி ஆந்திரா நகரி, வாராங்கால், மகாராஷ்டிரத்தின் போபால், கோவா, மேற்கு வங்கத்தின் கொல்கத்தா... என இந்தியா முழுக்க குழந்தை களைக் கடத்திப் பல்வேறு இடங்களில் விற்கும் மாஃபியா வலைப்பின்னல் கும்பலை ஷாம் சந்திப்பதும், அதனூடான துயர அனுபவங்களுமே படம்!

இந்தியாவின் 'மலிவு விலைத் தொழிலாளர்’ ரகசியத்தையும், குழந்தைக் கடத்தல் நெட்வொர்க் எத்தனை வீரியமாகப் பரவியிருக்கிறது என்பதையும் சினிமாவில் ஆவணப்படுத்தியிருக்கும் இயக்குநர் வி.இஸட். துரையின் முனைப்பு, கிரேட்!

மகன் தொலைந்தபோது ஒரு தந்தையின் பரிதவிப்பை முழுமையாகக் கொண்டு வருவதில் திணறும் ஷாம், வெவ்வேறு பயண அனுபவங்களுக்குப் பிறகு சிக்குப் பிடித்து அடர்ந்த முடி, தாடியும் வீங்கிய கண்களுமாகப்  பரிதவிக்கும் காட்சிகளில் நம்மை ஆக்கிரமித்துக்கொள்கிறார். கடத்தப்பட்ட சிறுமி தப்பி வரும்போது அவளைக் காப்பாற்றுவதா, வேண்டாமா எனப் பதைப்பும் பதட்டமுமாகத் தவிக்கும் இடத்திலும், கொல்கத்தாவில், 'என்னைக் கூட்டிட்டுப் போங்க’ எனப் பல்வேறு மொழிகளில் குழந்தைகள் அவரைச் சூழ்ந்துகொள்ளும்போது உடைந்து நொறுங்கும் இடத்திலும்... பார்வை யாளர்களை நெகிழ வைக்கிறார்!

ஷாமின் மனைவியாக பூனம் கவுர். ஊனமுற்ற பிச்சைக்காரரின் காலில் 'அண்ணா...’ எனக் கதறி அழும் காட்சியில் மட்டும் அதிர்ச்சி கொடுக்கிறார்.

ஊனமுற்ற பிச்சைக்காரராக வரும் ஸ்ரீதர்,  கடத்தல் டான் திவாகராக வரும் அனில் முரளி இருவரும் அசத்தி இருக்கிறார்கள். பிச்சைக்கார வேடத்தில் நிழல் உலகத்துக்கே உளவு சொல்வது, காவல் துறையினரைக் கெத்தாக டீல் செய்வது எனப் பிரமாதப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதர். 'ராம் சார்’, 'ராம் சார்’ என குரலில் கனிவும் செயலில் குரோதமுமாக வில்லத் தனம் செய்யும் அனில் முரளி, சூப்பர். ஆனால், நிழலுலக வில்லன் என்றாலே, அவர் பெண்மை கலந்த ஆணாக இருக்க வேண்டும் என்ற 'சித்தாந்தம்’ எரிச்சல்!  

'மேலே இருக்கிறவன் கீழே இருக்கிறவனுக்குப் பிச்சை போடற மாதிரி, கீழே இருக்கிற நான் மேலே இருக்கிற உனக்குப் போடற பிச்சை இது. பொறுக் கிட்டுப் போ!’, 'இங்கே இருக்கிற எல்லாருமே கௌதம்தானே’, 'உனக்கு எத்தனை பிள்ளை வேணும்னாலும் நான் பெத்துத் தர்றேன்... நீ இங்கே வந்துரு’ என சில இடங்களில் சூழ்நிலைக்கேற்ற  பொளேர் வசனங்கள் ஈர்க்கின்றன. ஆனால், படத்தில் அனைத்து பாத்திரங்களும் தன் தன்மை மீறி தத்துவம் பேசுவது, இறப்பதற்கு முன் முழுதாக இரண்டு நிமிடங்கள் பேசுவதெல்லாம்... அலுப்பு!

ஸ்ரீகாந்த் தேவாவின் இசை, பின்னணியில் விறுவிறுப்பு சேர்த்திருக்கிறது. மாட்டு இறைச்சிக் கூடமோ, மின்விளக்கு தயாரிப்பு ஆலையோ, ரகசியக் கிடங்குகளோ... அந்தந்த இருப்பிட இயல்பில் நம்மை நிலைநிறுத்துகிறது கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு.

வீட்டை விற்று குழந்தையை மீட்க முனைவது, மனைவியை விட்டு மாதக்கணக்கில் பிரிந்து குழந்தையைத் தேடித் திரிவது... என்று மகன் பாசத்தில் ஷாம் உழல்வதாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், அந்தளவுக்கான பாசப்பிணைப்பு கொண்ட மகனின் முகம் நம் நினைவிலேயே இல்லை. அவ்வளவுக்குத்தான் ஆரம்பக் காட்சிகளில் மகனின் கதாபாத்திரம் இடம்பெறுகிறது. இதனாலேயே, 'அச்சோ... அத்தனை சூட்டிகையான பையன் காணோமா...’ என்ற துடிப்பும், 'அந்தப் பிச்சைக்காரர்கள் கும்பலில் அந்தப் பையன் இருக்க வேண்டுமே’ என்ற பரிதவிப்பும் நமக்குத் தோன்றவே இல்லை!

குழந்தையைக் கடத்திய விவகாரத்தில் போலீஸ் தலையிடவில்லை... சரி. அட, ஏரியாவாரியாக தாதாக்களைப் போட்டுத் தள்ளிக்கொண்டே இருக்கிறார் ஷாம். அவரையுமா கண்டுகொள்ளாமல் விடுவார்கள்!? அதுவும் வில்லன்களே ஊர் ஊராக வழிகாட்டி அனுப்பி வைப்பதெல்லாம் என்னங்கப்பா? தேவைப்படும் சமயம் 'ஆக்ஷன் அவதாரம்’ எடுக்கும் ஷாமின் ஹீரோயிஸம் போன்ற லாஜிக் குறைபாடுகளின் தாக்கத்தால், '6 மெழுகுவத்தி’களின் சுடர் தட்டுத்தடுமாறி எரிகிறது!

ஆனால், படம் முடிந்த பிறகு தியேட்டரை விட்டு வெளியேறும் கும்பலில் தங்கள் குழந்தைகளின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறார்கள் பெற்றோர்கள். அந்தப் பெருவெளிச்சத்தைப் பாய்ச்சியதற்காக, இந்த மெழுகுவத்தியை உயர்த்திப் பிடிக்கலாம்!

- விகடன் விமர்சனக் குழு


அந்தச் சிறுவன், பெற்றோரைப் பரிதவிக்கவிட்டு காணாமல் போன தன் பிறந்த நாளில் ஊதி அணைத்தது, '6 மெழுகு வத்திகள்!’

தன் மகனின் ஆறாவது பிறந்த நாளன்று அவனை மெரினா பீச்சில் தொலைத்து விடுகிறார் ஷாம். காவல் நிலையத்தில் புகார் கொடுத்துக் காத்திருக்கிறார். அவர் மகனைக் கண்டுபிடித்துக் கொடுக்கவேண்டிய போலீஸோ, மெள்ள ஓர் இருட்டு உலகத்துக்கு அவரை அறிமுகப் படுத்திவிட்டு தன் பொறுப்பைக் கை கழுவுகிறது. சென்னையில் தொடங்கி ஆந்திரா நகரி, வாராங்கால், மகாராஷ்டிரத்தின் போபால், கோவா, மேற்கு வங்கத்தின் கொல்கத்தா... என இந்தியா முழுக்க குழந்தை களைக் கடத்திப் பல்வேறு இடங்களில் விற்கும் மாஃபியா வலைப்பின்னல் கும்பலை ஷாம் சந்திப்பதும், அதனூடான துயர அனுபவங்களுமே படம்!

இந்தியாவின் 'மலிவு விலைத் தொழிலாளர்’ ரகசியத்தையும், குழந்தைக் கடத்தல் நெட்வொர்க் எத்தனை வீரியமாகப் பரவியிருக்கிறது என்பதையும் சினிமாவில் ஆவணப்படுத்தியிருக்கும் இயக்குநர் வி.இஸட். துரையின் முனைப்பு, கிரேட்!

மகன் தொலைந்தபோது ஒரு தந்தையின் பரிதவிப்பை முழுமையாகக் கொண்டு வருவதில் திணறும் ஷாம், வெவ்வேறு பயண அனுபவங்களுக்குப் பிறகு சிக்குப் பிடித்து அடர்ந்த முடி, தாடியும் வீங்கிய கண்களுமாகப் பரிதவிக்கும் காட்சிகளில் நம்மை ஆக்கிரமித்துக்கொள்கிறார். கடத்தப்பட்ட சிறுமி தப்பி வரும்போது அவளைக் காப்பாற்றுவதா, வேண்டாமா எனப் பதைப்பும் பதட்டமுமாகத் தவிக்கும் இடத்திலும், கொல்கத்தாவில், 'என்னைக் கூட்டிட்டுப் போங்க’ எனப் பல்வேறு மொழிகளில் குழந்தைகள் அவரைச் சூழ்ந்துகொள்ளும்போது உடைந்து நொறுங்கும் இடத்திலும்... பார்வை யாளர்களை நெகிழ வைக்கிறார்!

ஷாமின் மனைவியாக பூனம் கவுர். ஊனமுற்ற பிச்சைக்காரரின் காலில் 'அண்ணா...’ எனக் கதறி அழும் காட்சியில் மட்டும் அதிர்ச்சி கொடுக்கிறார்.

ஊனமுற்ற பிச்சைக்காரராக வரும் ஸ்ரீதர், கடத்தல் டான் திவாகராக வரும் அனில் முரளி இருவரும் அசத்தி இருக்கிறார்கள். பிச்சைக்கார வேடத்தில் நிழல் உலகத்துக்கே உளவு சொல்வது, காவல் துறையினரைக் கெத்தாக டீல் செய்வது எனப் பிரமாதப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதர். 'ராம் சார்’, 'ராம் சார்’ என குரலில் கனிவும் செயலில் குரோதமுமாக வில்லத் தனம் செய்யும் அனில் முரளி, சூப்பர். ஆனால், நிழலுலக வில்லன் என்றாலே, அவர் பெண்மை கலந்த ஆணாக இருக்க வேண்டும் என்ற 'சித்தாந்தம்’ எரிச்சல்!

'மேலே இருக்கிறவன் கீழே இருக்கிறவனுக்குப் பிச்சை போடற மாதிரி, கீழே இருக்கிற நான் மேலே இருக்கிற உனக்குப் போடற பிச்சை இது. பொறுக் கிட்டுப் போ!’, 'இங்கே இருக்கிற எல்லாருமே கௌதம்தானே’, 'உனக்கு எத்தனை பிள்ளை வேணும்னாலும் நான் பெத்துத் தர்றேன்... நீ இங்கே வந்துரு’ என சில இடங்களில் சூழ்நிலைக்கேற்ற பொளேர் வசனங்கள் ஈர்க்கின்றன. ஆனால், படத்தில் அனைத்து பாத்திரங்களும் தன் தன்மை மீறி தத்துவம் பேசுவது, இறப்பதற்கு முன் முழுதாக இரண்டு நிமிடங்கள் பேசுவதெல்லாம்... அலுப்பு!

ஸ்ரீகாந்த் தேவாவின் இசை, பின்னணியில் விறுவிறுப்பு சேர்த்திருக்கிறது. மாட்டு இறைச்சிக் கூடமோ, மின்விளக்கு தயாரிப்பு ஆலையோ, ரகசியக் கிடங்குகளோ... அந்தந்த இருப்பிட இயல்பில் நம்மை நிலைநிறுத்துகிறது கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு.

வீட்டை விற்று குழந்தையை மீட்க முனைவது, மனைவியை விட்டு மாதக்கணக்கில் பிரிந்து குழந்தையைத் தேடித் திரிவது... என்று மகன் பாசத்தில் ஷாம் உழல்வதாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், அந்தளவுக்கான பாசப்பிணைப்பு கொண்ட மகனின் முகம் நம் நினைவிலேயே இல்லை. அவ்வளவுக்குத்தான் ஆரம்பக் காட்சிகளில் மகனின் கதாபாத்திரம் இடம்பெறுகிறது. இதனாலேயே, 'அச்சோ... அத்தனை சூட்டிகையான பையன் காணோமா...’ என்ற துடிப்பும், 'அந்தப் பிச்சைக்காரர்கள் கும்பலில் அந்தப் பையன் இருக்க வேண்டுமே’ என்ற பரிதவிப்பும் நமக்குத் தோன்றவே இல்லை!

குழந்தையைக் கடத்திய விவகாரத்தில் போலீஸ் தலையிடவில்லை... சரி. அட, ஏரியாவாரியாக தாதாக்களைப் போட்டுத் தள்ளிக்கொண்டே இருக்கிறார் ஷாம். அவரையுமா கண்டுகொள்ளாமல் விடுவார்கள்!? அதுவும் வில்லன்களே ஊர் ஊராக வழிகாட்டி அனுப்பி வைப்பதெல்லாம் என்னங்கப்பா? தேவைப்படும் சமயம் 'ஆக்ஷன் அவதாரம்’ எடுக்கும் ஷாமின் ஹீரோயிஸம் போன்ற லாஜிக் குறைபாடுகளின் தாக்கத்தால், '6 மெழுகுவத்தி’களின் சுடர் தட்டுத்தடுமாறி எரிகிறது!

ஆனால், படம் முடிந்த பிறகு தியேட்டரை விட்டு வெளியேறும் கும்பலில் தங்கள் குழந்தைகளின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறார்கள் பெற்றோர்கள். அந்தப் பெருவெளிச்சத்தைப் பாய்ச்சியதற்காக, இந்த மெழுகுவத்தியை உயர்த்திப் பிடிக்கலாம்!

- விகடன் விமர்சனக் குழு


Complements :: விகடன் விமர்சனக் குழு

Wednesday, 25 September 2013

மாரடைப்பு அபாயம்...!

குறட்டையை தடுக்க வழிகள்:-

நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.

ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம்

காரணங்கள்:

நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை ஏற்படுகிறது.

முழு தூக்கம் இருக்காது:

யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.

உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.

சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

3 வகை நோயாளிகள்:

குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.

1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.

2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.

3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.

மாரடைப்பு அபாயம்:

7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.

ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.

கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.

ஆபத்தான நோய்:

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.

கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.

ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.

குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே' நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.

உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

குறட்டையை குறைக்க:

ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.

குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.

ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.

யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.

குறட்டையை தடுக்க வழிகள்:-

நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.

ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம்

காரணங்கள்:

நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை ஏற்படுகிறது.

முழு தூக்கம் இருக்காது:

யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.

உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.

சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

3 வகை நோயாளிகள்:

குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.

1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.

2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.

3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.

மாரடைப்பு அபாயம்:

7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.

ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.

கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.

ஆபத்தான நோய்:

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.

கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.

ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.

குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே' நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.

உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

குறட்டையை குறைக்க:

ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.

குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.

ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.

யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.