Wednesday, 16 October 2013

விடுமுறையில் விவசாயம் ..!

விடுமுறையில் விவசாயம் செய்யுங்கள் உடல் ஆரோக்கியம் அடையும்!

எதில் மாற்று கருத்து இருந்தாலும், உலகிற்கே உணவளிப்பது விவசாயம் மட்டுமே என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது அப்படி மாற்றுக்கருத்து இல்லை என்று பகிரங்கமாக கூறிக்கொண்டு விவசாயத்தில் தற்போது கல்லூரி மாணவர்கள், படித்த இளைஞர்கள், மென்பொருள் துறையினர், சமுக சேவகர்கள் என பல்வேறு தரப்பினர் வார இறுதியில் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர் என்ற செய்தி நாளிதழ்களில் வந்தவண்ணம் உள்ளது.

சென்னை, கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் வாழும் படித்த இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு வர இறுதியில் விவசாயத்தில் ஈடுபடுகின்றார்கள் என்றும் இதில் மிகுந்த ஈடும்பாடு கொண்டவர்கள் முழுநேர விவசாயிகளாக உருவேடுகின்றனர் என்கிறது நாளிதழ் செய்திகள்.

இதேபோல் தொழில் துறையில் இருந்து தன் ஆர்வமிகுதியால் விவசாயத்தை முழுநேர தொழிலாக மாற்றிகொண்ட திரு. சதீஷ் அவர்கள் கூறுகையில் நான் ஆரம்ப காலத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரபல மென்பொருள் துறையில் பணியற்றிவரும்போது நிறைய சமுக பணிகளில் ஈடுபட்டுவந்தேன் அப்போதுதான் இயற்கை விவசாய முறையை பற்றி அறிந்தேன், எல்லோருக்கும் உணவளிக்கும் விவசாயமே!.. சிறந்த சமுகபணி என்று உணர்தேன், இதனால் இன்று முழுவநேர விவசாயியாக மாறிவிட்டேன் என்கிறார். இதே போல் திரு.ராம், திரு.ஜகன் போன்றோர் முழுநேர விவசாயிகளாக மாறிவிட்டனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

விவசாய ஆர்வளர் திரு.ராம் கூறுகையில் பெருநகரத்தில் வாழும் மக்கள் வாரவிடுமுறையில் நகரத்திற்கு அருகமையில் இருக்கும் விளைநிலங்களில் விவசாயிகளுடன் இணைந்து வேலைசெய்யலாம் இதனால் உடல் அதிக வியர்வை வெளியேற்றி அரோக்கியம் அடையச்செய்யும், ஒரு நாள் இயற்கை காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு கிடைக்கும், உலகிற்கே உணவளிக்கும் பணியை செய்த திருப்தி கிடைக்கும் கடவுளின் பிரதிநிதி விவசாயி என்ற பெருமையோடு அவர்கள் வாடிக்கையான தொழிலை செய்யலாம் என்கிறார்.
நன்றி :: இனையம்


No comments:

Post a Comment